ஆய்வுச் சுருக்கம்


தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் கண்டத் தட்டுப் பாறைகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு கண்டத் தட்டுப் பாறைக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டுப் பாறையானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்வதாலேயே சுனாமிகள் உருவாகுவதாகவும்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, நில அதிர்ச்சிகளும், சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகக் கடல் தரையும், கண்டங்களும், நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பானது,கடல் தரையையும்,கண்டங்களையும்,தொடர்ச்சியாகத் துளைப்பதால்,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கத்தின் படி,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.
ஆணாம் அவ்வாறு இல்லாமல், கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம்,கடல் தரையும்,கண்டங்களும்,நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அதே போன்று,கடல் தளங்களுடன் கண்டங்களானது,பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கம் உண்மையென்றால்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
இந்த நிலையில்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட, 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றையும், நாசா அமைப்பினர் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலமாக கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தரையும், கண்டங்களும், நிலையாக இருப்பதும், ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு, எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதற்கு எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
அதாவது,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் சிறிது அதிகரிப்பதாகவும்,அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,சில கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிறிது உயர்வதாகவும்,இதே போன்று,எரிமலையில் இருந்து வாயுக்களும் பாறைக் குழம்பும் வெளிப் பட்ட பிறகு,எரிமலையின் உயரமானது சிறிது தாழ்வடையும் பொழுது,எரிமலையுடன் உயர்ந்த நிலப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிறிது இறங்குவதால், எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக, எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,அந்த நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன்,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பகுதிகளில்,எரிமலைகளில் இருந்து வெளிப் படும்,கதிரியக்கத் தன்மையை உடைய ரேடான் என்ற வாயு வெளிப் பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இது போன்ற ஆதாரங்கள் மூலம், பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,, நில அதிர்ச்சிகளும், சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
இதே போன்று,புதைப் படிவ ஆதாரங்கள் மூலமாக,டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்திருப்பதும்,அதனால் துருவப் பகுதிகளில்,பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதும்,அதில் டைனோசர்கள் கூட்டம் வாழ்ந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அத்துடன்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததற்கு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவாகும் பொழுது,அதில் இருந்து பிரியும் நீரானது,ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததே காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக பூமிக்கு அடியில் பெரும் பகுதியாகப் பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பாறைக் குழம்பு நீர் உருவாகுவதும் தொடர்ந்து நடை பெரும் நிகழ்வு என்பதும் தெரிய வந்துள்ளதால்,எதிர் காலத்தில் கண்டங்கள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் மூழ்கடிக்கப் படும், என்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்ட உயர்வால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,குளிர்ந்து இருப்பதும்,அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும்,அதனால் பசுமைக் காடுகள் அழிந்திருப்பதும்,அதனால் டைனோசர் இனம் அழிந்து இருப்பதும்,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?