Posts

Showing posts from January, 2018

என்னுடைய ஆய்வுத் தலைப்பு -

என்னுடைய ஆய்வுத் தலைப்பு - விலங்கினங்கள் எப்படி பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன? என்னுடைய ஆய்வு முடிவு- கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததன் காரணமாகவே,விலங்கினங்களானது, பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன. எனது ஆய்வில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம், என்று கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகளாக உருவாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதே போன்று,கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும்,காணப் படுவதற்குக் கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் சேர்ந்து,கண்டத்

டைனோசர்கள் காலத்துப் பூமி.

Image
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,தற்பொழுது கண்டங்களைச் சுற்றிலும்.கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர்களானது,கடல் மட்டத்துக்கு மேலாகத் தொடர்ச்சியாக இருந்ததால்,அதன் வழியாக டைனோசர்கள் உள்பட ஏனைய விலங்கினங்களும்,பயணம் செய்து, ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன.அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகளாக உருவாகிய பொழுது,அதிலிருந்து பிரிந்த நீரானது,கடலில் கலந்ததால்,கடல் மட்டம் உயர்ந்ததால்,அந்தக் கண்டங்களுக்கு இடையிலான, விலங்கினங்களின் போக்குவரத்து தடை பட்டது.அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததாலும்,கடலின் பரப்பளவானது அதிகரித்ததாலும்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள் உருவாகியது.இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் டைனோசர்கள் உள்பட பனி யானைகளும் முற்றாக அழிந்தன. (படம்-இணையம்)

கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததற்கு ஆதாரம்.

ஜெர்மன் நாட்டின் கிரிஸ் வால்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான மார்டின் மிஸ்கிடே,தலைமையிலான குழுவினர்,கரீபியன் தீவுப் பகுதியி ல்,ஒலி அலைகள் மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களை அறிந்து, அவற்றை கடல் தரை குறித்த வரை படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்பொழுது,கடல் தரையில் பல இடங்களில் மலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பகுதிகள், சம தளமாக இருப்பதை அறிந்தனர். அதே போன்று ,அந்த வரை படத்தில் சம தளம் என்று குறிப்பிடப் பட்டு இருந்த இடங்களில்,ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) உயரமுள்ள, மலைகள் இருப்பதையும் அறிந்தனர். அதே போன்று,அந்தப் பகுதியில், கடல் தரையில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் காணப் படக் கூடிய கூழாங் கற்கள் இருப்பதைக் கண்டனர். அத்துடன் ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், நத்தைகள்,மற்றும் பாசிகள் இருப்பதைக் கண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். அதன் அடிப்படையில்,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த மலைகளானது,ந

ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன?

Image
தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள். ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன? தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், எரிமலைத் தீவுக் கூட்டமான கலாபாகஸ் தீவுகளில்,ராட்சத ஆமைகள் காணப் படுகின்றன.அந்த ஆமையினமானது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்,சிலியென்சிஸ் என்ற ஆமையின் நெருங்கிய இனவகை என்பது மரபணு ஆய்வில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து சிறிய அளவுள்ள ஆமைகளானது,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,இரண்டு வார காலம்,கடலில் தத்தளித்தபடி,தற்செயலாகக் கலாபாகஸ் தீவை அடைந்திருக்கலாம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு,அந்தத் தீவுகளில்,கொன்றுண்ணி விலங்குகள் இல்லாத காரணத்தாலும்,தாவரங்கள் அதிகமாகவும்,உணவுக்குப் போட்டியாக வேறு விலங்க

பூமி ஒரு நீர்க் கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரானது ,சுடு நீர் ஊற்று வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு பெரும் பகுதியாக இருப்பதுடன்,அந்தப் பாறைக் குழம்பானது,குளிருந்து கொண்டு இருப்பதால், பூமிக்கு அடியில் நீர் சுரப்பதும் தொடரும்.எனவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து,நிலப் பகுதிகள் யாவும் கடலுக்குள் மூழ்கும். தனால் தரையில் வாழக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்கள் முழுவதும் முற்றாக அழியும். டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே,டைனோசர்கள் உள்பட ஏனைய விலங்கினங்களும் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்துக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.அதன் காரணமாகவே,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,கண்டங்களிலும் தீவுகளிலும்,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுகின்றன. டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்த பொழுது,கடலின் பரப்பளவும் கு