Posts

Showing posts from 2013

எரிமலை, நில அதிர்ச்சி, சுனாமி

சுனாமிக்கு தற்பொழுது கூறப் படும் விளக்கங்கள் தவறு.   கடல் தரையுடன் கண்டங்கள் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.   தற்பொழுது கடல்தரையுடன் கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் கடல் தரையானது நகர்ந்து செல்வதாலேயே சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.   இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், கடல் தளம் தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.   இந்த நிலையில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே, நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் அடிப்படை ஆதாரமின்றி, வெறும் யூகத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைப் தெரிவித்து இருப்பதும், அறிவியல் ஆய்வு மையங்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை

புதை படிவங்களும் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களும்.

தற்பொழுது பனி மூடிய துருவப் பகுதிகளில் உள்ள தீவுகளில் ,வெப்ப மண்டலக் கால நிலையைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.     அதாவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் இருந்த தீவுப் பகுதிகள் வெப்ப மண்டலப் பகுதியில் இருந்ததாகவும் ,பின்னர் வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.   கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து என்பது ஒரு அடிப்படை ஆதாரமற்ற கருத்து.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.     அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தொடர்பு துண்டிக்கப் பட்டது.கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது பூமியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்தது.   அதனால் துருவப் பகுதிகளிலும் கூட வெப்ப மண்டலக் கால நிலை நிலவி இருந்தது.   அதனால் துருவப் பகுதிகளில் ட

நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் நான் கூறும் விளக்கத்தை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

Image
சுனாமிகளுக்கு கூறப் படும் யூகத்தின் அடிப்படையிலான விளக்கங்களும் ஆதாரப்பூர்வமான விளக்கமும்.   தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியானது தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கடல் தரையுடன் கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.   இவ்வாறு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரையானது தனித் தனியாக நகரும் பொழுது கடல் தரைப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.   ஆனால் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரி படத்தில் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன் அடிப்படையில் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.   முக்கியமாக ஹைத்தி தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்க

ஒரு பேரழிவின் மறுபக்கம்.

Image
கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.             தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,கடல் தரையானது தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தரையுடன் கண்டங்களும் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறி இருப்பது, அவர்கள் வெளியிட்ட வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது.        இந்த நிலையில் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் நிகழந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து புவியியல் வல்லுனர்கள் தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட கடல் தரைப் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.     குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு