Posts

Showing posts from November, 2012

கேள்வியும் நானே பதிலும் நானே.

Image
கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஏறுக்கு மாறாக உருவாகி இருக்கின்றன. அவற்றின் தொன்மையும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அவற்றின் வேதிச் சேர்மாணங்களும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கின்றன. கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருந்தால்தான் இது சாத்தியம். இந்த நிலையில் வட அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயர்ந்து கொண்டு இருக்கும் ஒரு எரிமலை வெப்ப மையத்திற்கு மேலே, அந்த மையப் பகுதியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே போன்று மவுண்ட் பெலிக் என்ற எரிமலையைச் சுற்றிலும், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலைகளைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி

ஒரு விஞ்ஞானியின் கேள்வி.

Image
கண்டங்களின் மேலும் கடல் தரையின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஏறுக்கு மாறாக உருவாகி இருக்கின்றன. அவற்றின் தொன்மையும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அவற்றின் வேதிச் செர்மாணங்களும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கின்றன. கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருந்தால்தான் இது சாத்தியம். இந்த நிலையில் வட அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயர்ந்து கொண்டு இருக்கும் ஒரு எரிமலை வெப்ப மையத்திற்கு மேலே, அந்த மையப் பகுதியைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே போன்று மவுன்ட் பெலிக் என்ற எரிமலையைச் சுற்றிலும், ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள எரிமலைகளைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் க

எதிர்பாராத கண்டுபிடிப்பு

Image
  ஒரு நாள் அண்ணா சாலையில் L I C யில் பேருந்துக்கு காத்துக் கொண்டு இருந்த பொழுது தற்செயலாக அங்கு இருந்த பழைய புத்தகக் கடையில் நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிய பொழுது தற்செயலாக அந்தப் படம் கண்ணில் பட்டது. ஒரு மலையின் மேல் இருவர் நின்று கொண்டு தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து கொண்டு இருப்பதாகவும் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. உடனே எனக்கு அந்த மலைப் பகுதியானது அப்படியே கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பது புரிந்தது.அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாக உணர்ந்தேன்.   ஆம்.நிலப் பகுதிகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருக்கின்றன.அதனால்த ான் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகின்றன. அதனைத் தொடர்ந்து நான் இணையத்

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

Image
அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் எரிமலைத் தீவு வரிசைகள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி. அட்லாண்டிக் கடல் தரையும் ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் கானரி எரிமலைத் தீவுத் தொடரும் கேமரூன் எரிமலைத் தொடரும் உருவாகி இருக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியபடி ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் கானரி எரிமலைத் தீவு வரிசையானது அட்லாண்டிக் கடலின் தரையில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத் திட்டிற்கு மேலும் தொடர்கிறது.  இதனடிப்படையில் அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால் துளைக்கப் பட்டதால் கானரி எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவானதாக நம்பப் படுகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால்  துளைக்கப் பட்டு எரிமலைத் தீவுகள் உருவாகும் பொழுது உண்மையில் அட்லாண்டிக் கடல் தரையுடன் ஆப்பிரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இருந்தால், கானரி எரிமலைத் தீவு வரிசைய

கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவியோட்டைத் துளைத்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வதால் எரிமலைகள் உருவாகின்றன.இந்த நிலையில் கடல் தரையும் கண்டங்களும் நகர்ந்தால் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கடல் தரையிலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருக்கின்றன.உதாரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையும் லைன் எரிமலைத் தீவு வரிசையும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஒன்றுக் கொண்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.எனவே கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது கடல் தாரையின் மேலும் கண்டங்களின் மேலும் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் நிரூபணமாகிறது. உதாரணமாக பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் எரிமலைத் தீவுகளானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கின்றன.இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகளான

அட்லாண்டிக் கடல் பகுதியை விலங்கினங்கள் எப்படிக் கடந்தன ?

Image
A, தற்காலிக நிலப் பாலம் மூலம். B, கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்ததால். C, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் தாவரங்கள் மூலம். D, கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால். பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவைக் கடல் வழியாக அடைவதற்காக ஐரோப்பியர்கள் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்த பொழுது தற்செயலாக அமெரிக்கக் கண்டங்களைக் கண்டு பிடித்துக் குடியேறினார்கள்.அப்பொழுது அவர்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் கண்ட குதிரை,காட்டெருமை,ஒட்டகம் போன்ற விலங்கினங்கள் அமெரிக்காவில் இருப்பதைக் கண்டு குழம்பினார்கள். இந்த விலங்கினங்கள் எப்படி ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தன ? என்று சிந்தித்தார்கள்.உடன் முன்னொரு காலத்தில் அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில் ஒரு நிலப் பாலம் இருந்து அதன் வழியாக இந்த விலங்கினங்கள் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம் என்றும் பின்னர் அந்த நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தந்திக் கம்பிகள் பதிக்கும் பணியின் பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ஒரு நீண்

கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மேட்டுப் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் எரிமலைகள் இருப்பதுடன் நில அதிர்ச்சிகளும் இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படுவது பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த எரிமலைப் பகுதியில் உள்ள கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும் அதே நேரத்தில் இந்தக் கடலடி மேட்டுப் பகுதிக்கு இரண்டு புறமும் தொலைவில் உள்ள கண்டங்களுக்கு அருகில் உள்ள கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருப்பதாகவும் இதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறைகள் உருவாகி அவைகள் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததே காரணம் என்றும் அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்த படி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது. குறிப்பாக எரிமலைப் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றத்தால் பாறைக் குழம்பு வெளிவந்து பாறையாக உருவாகுவதால் அப்பகுதியில் உள்ள பாறைகளின் தொன்மையானது குறைவாகவே இருக்கும். அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகளில் உள்ள க

பினாமி எச்சரிக்கை மையம்.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
சமீபத்தில் இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்படாது என்று விஞ்ஞானிகள் அறிவித்த ஒரு வாரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டதால் அப்பாவி மக்கள் நூற்றுக் கணக்கில் பலியாகினர். இதையடுத்து நில அதிர்ச்சி வராது என்று கூறிய விஞ்ஞானிகளுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அப்பொழுது அந்த விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள ஐயாயிரத்திற்கும் அதிகமான புவியியல் விஞ்ஞானிகள் ‘’ நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிய இயலாது ’’ எனவே விஞ்ஞானிகளை  விடுவிக்குமாறு  கடிதம் எழுதி கையொப்பமிட்டு இத்தாலி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். முக்கியமாக சுனாமியானது நில அதிர்ச்சியால் ஏற்படுகிறது. இந்த நிலையில் நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிவதற்காக இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் ‘’ பாறைகளில் அழுத்தத்தை அறியக் கூடிய கருவிகளை ’’( pressure sensors ) பொருத்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருகின்றனர். அந்தக் கருவிகள் மூலம் பாறைகளில் அழுத்தம் ஏற்படுவதை அறிந்து நில அதிர்ச்சி ஏற்படப் போவதை முன் கூட்டியே அறிந்து சுனாமியை வரப் போவதை முன் கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யப் போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் நம்பப் படுகிறது. இதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் இன்னொரு பாறைத் தட்டு செல்வதால்தான் சுனாமி ஏற்படுகிறது என்றும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது மூன்று விதமான ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆதாரம் ஒன்று moon.gif தற்பொழுது ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. உதாரணமாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த முதலை