Posts

Showing posts from August, 2010

மர்ம நில நடுக்கம்

1 998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள்,பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் அமைந்திருக்கும் ததித்தி தீவில் ரிக்டர் அளவில் 5.5 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஏன் ஏற்ப்பட்டது என்ற கேள்விக்கு இது வரையிலும் யாராலும் சரியான பதிலைக் கூற இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் தகித்தி தீவானது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் நடுவில் அமைந்திருக்கின்றன. அதாவது பசிபிக் பெருங் கடலின் தென் பகுதியில் குறிப்பாக மத்தியப் பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே வழக்கம் போல் பாறைத் தட்டு நகர்ந்து நில நடுக்கம் ஏபட்டது என்று எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் விளக்கம் கூற முன் வரவில்லை. குறிப்பாக தகித்தி தீவானது ஒரு எரிமலைத் தீவு என்பது குறிப்பிடத் தக்கது. எரிமலையானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையைப் பொத்துக் கொண்டு வெளிவரும் பொழுது,அப்பகுதியில் இருந

scientist.g.ponmudi.Makkal TV part01

தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன? மண் புழுக்களால் எவ்வகையிலும் கடல் பகுதியைக் கடக்கவே இயலாது. ஆனால் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கும் பல தீவுகளில் அரியவகை மண் புழுக்கள் காணப் படுகிறது. குறிப்பாக பாக்லான்ட் தீவுகளில் பாக்லாண்டிகஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது.அதே போன்று கெர்கூலியன் கெர்கூலியன்சிஸ் என்ற வகை மண் புழுக்கள் காணப் படுகிறது. இவ்வாறு தீவுகளில் உலகில் வேறெங்கும் காண இயலாத அரிய வகை மண் புழுக்கள் காணப் படுவது நீண்ட காலமாகவே விளக்க முடியாத புதிராக இருந்து வருகிறது. தீவுகளுக்கு மண் புழுக்கள் எப்படி சென்றன? பிரிட்டிஷ் இயற்கையியலாளர் பிரான்க் எவரெஸ் பெடார்ட் பல தீவுகளுக்குச் சென்று பல அறிய வகை மண் புழுக்களைக் கண்டு பிடித்தார். அவர் மண் புழுக்களால் சிறிய கடல் பகுதியைக் கூட கடக்க இயலாது என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். மனிதனைப் போலவே மண் புழுக்களுக்கும் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.ஆனாலும் மண் புழுக்களுக்கு நுரையீரல் இல்லை. எனவே மண் புழுக்கள் தோல் மூலம் சுவாசிக்கிறது.காற்று மண் புழுவின் ஈரமான தோலில் படும் பொழுது காற்றில